விக்ரம் மகன் துருவ் நடிக்கஇ இயக்குனர் பாலா இயக்கிய படம் வர்மா. இது தெலுங்கில் விஜய்தேவரகொண்டா நடித்து செம ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்.
கோலிவுட் வரலாற்றில் முழுமையாக எடுக்கப்பட்டு தயாரிப்பாளர்களால் சரியில்லை என்று மீண்டும் எடுக்கப்பட்டு வரும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பாலா இயக்கி முடித்து ரிலீசுக்கு தயாரான நிலையில் விக்ரம் குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தை பார்த்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அர்ஜுன்ரெட்டியின் கதை போலவே இல்லை. இந்த படம் வெளியானால் தனது மகனின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று அதிர்ச்சி அடைந்தார் விக்ரம்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அதிரடியாக ஒரு முடிவை வெளியிட்டனர். பாலா இயக்கிய வர்மா படத்தை டிராப் செய்வதாகவும்இ அந்த படம் வெளியாகாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் துருவ்வை வைத்து மீண்டும் அந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் புதிதாக எடுக்க ஆரம்பித்தனர். இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டியின் உதவியாளராக பணியாற்றிய கிரிசாயா இயக்குவார் என்றும் அறிவித்தனர்.
தற்போது இந்த படத்தின் பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் நடந்து வருகிறதாம். இயக்குனர் என்னவோ கிரிசாயாதான் என்றாலும் இந்த படத்தை இயக்கி இருப்பது விக்ரம்தான் என்கின்றனர்.
தனது மகனின் எதிர்காலம் அழுத்தமாக கோலிவுட்டில் பதிய வேண்டும் என்பதால் தான் நடித்து வந்த படங்களை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு ஆதித்ய வர்மா படத்தின் இயக்குதல் பணியை மேற்கொண்டுள்ளார் என்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இயக்குனர் கிரி சாயாதான் சொல்லணும்.