14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இயக்குனராக களம் காண போகிறார் சிம்பு என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்ல. தன் அப்பா போல் கதை, திரைக்கதை, இயக்கம், பாடல், இசை என்று அனைத்து டிபார்ட்மென்டையும் ஒரு கை பார்க்க இருக்கிறாராம்.
சிம்புக்கு அன்பானவன், அசராதன், அடங்காதவன் படம் பெரும் அடியை கொடுத்தது. இந்த படத்தின் மகா மெகா தோல்வி அவரை பாடம் கற்றுக் கொடுத்தது என்று கூட கூறலாம். சிம்பு நடித்து கதை சரியில்லா விட்டாலும் ரசிக்கும் அவரது ரசிகர்கள் அந்த படத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இதையடுத்து மிகவும் நொந்து கிடந்தார் சிம்பு. இருப்பினும் இயக்குனர் மணிரத்னம் தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். படப்பிடிப்புக்கு எப்போதும் தாமதமாக வருவதும் இழுத்தடிப்பதுமாக இருந்து வந்த சிம்பு அப்படியே மாறிபோனார். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதேபோல செக்க சிவந்த வானம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பின்னர் வந்த 'வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்' படம் தோல்வியை சந்தித்தாலும் சிம்புவிற்கு எவ்வித கெட்ட பெரும் இல்லை.
இருப்பினும் இந்த படத்தில் இவரது உருவம் மெகா சைசிற்கு இருந்தது குறையாக கூறினர் ரசிகர்கள். தொடர்ந்து மாநாடு படத்தில் நடிப்பதற்கு முன்பு தீவிரமாக உடல் எடையை குறைக்க மெனக்கெட்டார் சிம்பு. தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் மாநாடு மப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். இந்தாண்டுக்குள் இந்த படங்களை முடித்துவிடுவார் என்று தெரிகிறது.
இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். இதில் நடிப்பு , இயக்கம், இசை, பாடல், கதை, திரைக்கதை என்று அனைத்து டிபார்மென்டையும் தானே கவனிக்கிறாராம் தன் தந்தை டி.ஆர் போல் என்று தெரிய வந்துள்ளது. மன்மதன் வல்லவன் படத்திற்கு பின்னர் 14 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஒரு படத்தை இயக்குகிறார்.
இதில் முக்கிய கேரக்டரில் சிம்புவால் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தானம் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.