கோலிவுட்டில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு பின்னர் வெற்றிக் கொடி நாட்டி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விக்ரம். நடிப்பின் மீது தீராத தாகம் கொண்ட இவர் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் கடும் உழைப்புகள் பெரிய அளவில் பாராட்டப்படும்.
நடிகர் கமலுக்கு பின்னர் நடிப்புக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர் என்று பெயர் பெற்றவர் விக்ரம். தற்போது இவரது மகனும் நடிக்க வந்து விட்டார். இருப்பினும் விக்ரமிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், கடாரங் கொண்டான் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் இவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்று சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரமின் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு விக்ரம் 63 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்குஇ, இந்தி என்று 3 மொழிகளில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது என்று தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் கேரக்டர் பற்றி எவ்வித தகவலும் கூறப்படவில்லை. வரும் 2020ம் ஆண்டில் இந்த படம் வெளியாகும் என்று மட்டும் தெரிய வந்துள்ளது.