உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்பு இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 1 வருடம் 2 மாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்துல் ஸலாம் இர்ஷாத் மொஹம்மட் என்ற இவர் சுற்றுலா விசாவில் மியான்மர் சென்று மேலதிக காலம் அங்கு தங்கியிருந்தது சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்துஇ யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களி;ல் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேர்வரை கொல்லப்பட்ட அதேவேளை 500 பேர்வரை காயமடைந்திருந்தமை நினைவுகூரத்தக்கது.