தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில் “உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள் யாரோ ஒருவரின் தேவைக்காக கொள்கை என்பதே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம், கோழைத்தனமான செயற்பாடு என தெரிவித்த ஹக்கீம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள்.
ஆகவே இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று குறப்பிட்டார்