நான்காயிரம் பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் வைத்தியர் கைது செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்களப் பத்திரிகை வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து குறித்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்த நிலையிலேயே குறித்த வைத்தியர் கடந்த இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.