வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வெளியேறினார்.
சுமார் 5 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளில் லங்கா சதோசவில் இடம்பெற்ற 257,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மாலை 4.30 அளவில் அவர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.