ஒரு வாரம் தாமதமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கன்னியாகுமரியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வந்தது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
மேலும் ஒரு வாரம் தாமதமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் பரவலாக மழை பெய்ய தொடங்கி விட்டது.
இதனால்இ தக்கலை அருகில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மார்த்தாண்டம், களியக்காவிளை, நாகர்கோவில், குளச்சல், தக்கலை உட்பட பல தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.
திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினங்களில் வருகை புரிவது வழக்கம். தற்போது மழை பெய்து தண்ணீர் கொட்டுவதால் உற்சாகத்துடன் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை புரிய தொடங்கி உள்ளனர். இந்த கனமழையால் கன்னியாகுமரி பசுமை போர்த்தி காணப்படுகிறது. இந்த மழை தொடர்ந்தால் இப்பகுதியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னை தீரும் வாய்ப்புள்ளது.