Saturday 20th of April 2024 09:37:20 AM GMT

LANGUAGE - TAMIL
ஓய்வை அறிவித்தார் யுவராஜ்சிங்!

ஓய்வை அறிவித்தார் யுவராஜ்சிங்!


சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மும்பையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட்டின் சகலதுறை ஆட்டக்காரராக அறியப்படும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெளிநாட்டுகளில் நடைபெறும் 20-20 போட்டிகளில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர உள்ளதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கடைசியாக யுவராஜ் சிங் 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கடைசியாக 2017-ம் ஆண்டு விளையாடினார்.

கடந்த 2000-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான யுவராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே 80 பந்துகளுக்கு 84 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்.

தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றிலேயே தனது மிகச்சிறப்பான ஆட்டத்தைக் கடந்த 2011 உலகக்கோப்பை தொடரின் போது வெளிக்காட்டினார் யுவராஜ் சிங்.

கடந்த 2011 உலகக்கோப்பைப் போட்டியில் 362 ஓட்டங்கள், 15 விக்கெட்டுகள், 4 ஆட்டநாயகன் விருதுகள், சிறந்த விளையாட்டு வீரர் என அதிரடி காட்டினார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE