Thursday 18th of April 2024 07:40:14 PM GMT

LANGUAGE - TAMIL
மழையினால் கைவிடப்பட்ட போட்டி
மழையினால் கைவிடப்பட்ட 15 ஆவது லீக்  போட்டி

மழையினால் கைவிடப்பட்ட 15 ஆவது லீக் போட்டி


மழை காரணமாக தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான 15 ஆவது லீக் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.

இதில் தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி தடைபட்டது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 3 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்திலும் தென்னப்பிரிக்கா அணி 1 புள்ளியுடன் 9 ஆவது இடத்திலும் உள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE