இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினரின் நாடளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்புப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்தாயிரத்து 100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பில் நாராஹேன் பிட்டிய தலைமையகச் செயலாளர் ரஞ்சித் விஜேசிறி கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த இரு நாட்களாக சிறிகொத்தாவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர்கள் பலருடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வு கிட்டவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.