Tuesday 16th of April 2024 04:50:18 PM GMT

LANGUAGE - TAMIL
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... நாங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்று!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... நாங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்று!


இயற்கை அள்ளிக் கொடுத்துள்ள பல்வேறு மூலிகைகள் நம் உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. இது தெரியும். அதேபோல் பூக்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். கடுகு என்னவோ சிறியதுதான்... ஆனால் அதன் மகத்துவம் உயர்ந்த ஒன்றுதானே! அப்படிதான்... சரி... எந்த பூவில் என்ன மகத்துவம் இருக்கிறது என்பதை பார்க்கலாமா!

ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் செம்பருத்தி செடி கண்டிப்பாக இருக்கும். பூஜைக்காக செம்பருத்தி பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் கூந்தல் நன்கு வளர செம்பருத்தி இலைகள், பூக்கள் பயன்படுகிறது என்று தெரியும். அதைவிட மிகப்பெரிய ஒரு மருத்துவ குணம் செம்பருத்தி பூவில் உள்ளது. அதை பற்றி அறிந்து கொள்க.

நான்கு செம்பருத்திப் பூக்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சிறிதளவு தண்ணீரில் நன்கு சுண்டும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். அதன்பின்னர் அதை வடிகட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து கொள்ளுங்கள். இந்த கஷாயம் மிகவும் மருத்துவ குணம் கொண்டது ஆகும். இந்த கலவையுடன் தேவையான சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்படும். இதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது செம்பருத்தி பூக்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பார்த்தாலே அட ஏன்? நினைத்தாலே வாயெல்லாம் கசக்கும். அட ஆமா.. வேம்புதான். ஆனால் வேம்பின் மகத்துவம் தெரியும். வேப்பம் பூவின் மகத்துவம்... இதிலும் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. வேப்பம் பூவை காயவைத்து வறுத்துப் பொடி செய்து, பருப்பு ரசத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். வாந்தி, ஏப்பம், குடல் கிருமிகள் அனைத்தும் அழிந்து போகும... காணாமல் போயோ போச்சு.

தலைபாரத்தால் தவிப்பவர்கள் ஏராளம் பேர். தலைபாரம் வந்துவிட்டால் அவ்வளவுதான். வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. மாத்திரை, தைலத்தை தேடுவோம். ஆனால் இயற்கையாக தலைபாரத்தை நம்மை விட்டு ஓடச் செய்யும் மருத்துவ குணம் கொண்டது தும்பைப்பூ. ஆமா... தும்பைப் பூவை நல்லெண்ணெய் விட்டு நன்றி காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணைய்யை வைத்து தலை முழுகி வந்தால் போதும் உங்கள் பக்கமே தலைபாரம் வராது. பின்னர் என்ன நிம்மதிதான்.

இக்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் ஆஸ்துமா தாக்கி விடுகிறது. இதை போக்க என்ன செய்யணும். அருமையான மருந்து நம் அருகிலேயே இருக்குங்க. வயல் ஓரங்களில் நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ள தூதுவளைச் செடியே உங்களுக்கு அருமருந்துதான். தூதுவளைப் பூவை சிறிதளவு சேகரித்து அதை பாலுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்த்துமா மட்டுப்படும். இயற்கை நம்மை சுற்றியே பெரிய அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை வைத்துள்ளது. எது... எதற்கு பயன்படும் என்று தெரிந்து கொண்டால் போதும். ஆரோக்கியமான வாழ்வுதான்.

மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக்கொண்டால் நன்கு சிவக்கும் என்பது தெரியும். இதே மருதாணியை அரைத்து தலைக்கு பூசினால் குளிர்ச்சி கிடைக்கும். அட இதெல்லாம் தெரியும் என்கிறீர்களா? தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.

மருதாணிப் பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். அருமையான தூக்கம் வரும். அதுமட்டுமா... அதிக உஷ்ணம் கொண்ட உடல் அமைப்பு உடையவர்களுக்கு உடல் வெப்பம் தணியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE