பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா ஏழாவது தொடர் வெற்றியை பாகிஸ்தானுக்கு எதிராக பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 140 ஓட்டங்களை தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பெற்று சாதனை படைத்தார்.
நேற்றைய ஆட்டத்தில் ரோகித் அடித்த சிக்ஸர் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அடித்த சிக்ஸரைப் பிரதிபலித்ததாக ஐசிசி புகழ்ந்து குறித்த இரண்டு காட்சிகளையும் இணைத்து காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
https://twitter.com/i/status/1140335872803577856
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: