கேங்ஸ்டர் வில்லன் கேரக்டரில் சிம்பு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் எடுக்கப்பட்டு வருகிறது.
வந்தால் ராஜாவாகதான் வருவேன் படத்திற்கு பின்னர் ஷோலோ ஹீரோயினாக நடிகை ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை முடித்து கொடுத்த பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார்.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு.
கன்னட படமான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இதற்கிடையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.