வல்வெட்டித்துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் முப்பது கிலோ கஞ்சா பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டிதுறை நகர சபை உறுப்பினர் ஒருவரின் காணிக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த உறுப்பினர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் அங்கு பொதியொன்றில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்