கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமான நிகழ்வில் குறித்த பகுதியில் 10 இலட்சம் பேர் வரை கூடியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்திலே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர. அதில் 4 பேர் காயமடைந்தனர்
அத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படுவோர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.