Tuesday 16th of April 2024 05:41:35 AM GMT

LANGUAGE - TAMIL
முறையாக நடவடிக்கை எடுத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

முறையாக நடவடிக்கை எடுத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!


ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தற்போது முதல்வராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரி தற்போது முறையான நடவடிக்கையில் சிக்கி உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை உதவி இயக்குநராக இருந்தவர் சீனிவாச காந்தி. அப்போது ஆந்திரா முதல்வராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இந்த காலக்கட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டது.

அப்போது சோதனை என்கிற பெயரில் தன்னை வேட்டையாடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்து இருந்த சம்பவமும் நடந்தது.

சோதனை நடந்த போது தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் சீனிவாச ரெட்டி ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார் என்பதும் அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

இந்நிலையில் அரசியல் அரங்கில் காட்சிகள் மாறியுள்ளன. மக்களின் அமோக ஆதரவை பெற்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி, இவர் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

அதில் ஒன்றாக தன் மீதான பணமோசடி வழக்குகளை விசாரித்த சீனிவாச காந்திக்கு எதிராக தற்போது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதிலும் முறையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் மீதான புகார்கள் மீது விசாரிக்கும் உத்தரவுதான் அது.

இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடியே 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையும் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

சீனிவாச காந்தி, தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை என்பதால் சிறிதும் மனம் மாறாமல், ‘குற்றம் செய்தது அரசியல்வாதியாக இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படாது’ எனக் கூறி அதனை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE