நாளுக்கு நாள் பார்வையாளர்களை கட்டி போட்டு எதிர்பார்ப்பை எகிற அடித்து வருகிறது பிக்பாஸ்-3 சீசன். வீட்டில் உள்ளவர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை, அதனால் ஏற்படும் அழுகை என்று பிக்பாஸ் 3 வீடு காணப்படுகிறது.
இதில் லொஸ்லியா, தர்ஷன், முகின், சரவணன் ஆகியோர் மட்டும் எவ்வித பிரச்சனைகளிலும் தலை காட்டாமல் உள்ளனர். போட்டியாளர்களில் ஒருவரான இயக்குனர் சேரன் கூட தன்னுடைய முடிவை பொதுவாக சொல்கிறார்.
இதில் சரவணன் ஒன்றுமே சொல்வது இல்லை. அவர் உண்டு... அவர் வேலையுண்டு என்று உள்ளார். அப்படிப்பட்ட சரவணனே இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் செம கோபப்படுவதாக காட்டப்படுகிறது.
இன்றைய டாஸ்கில் சரவணனுக்கு சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வரவில்லை. இதனால், யாருமே உதவ வரவில்லை. இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால் அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறியுள்ளார்.