பாராளுமன்ற வளாகத்தில் இன்று கூடவிருந்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் 24 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் அரச புலனாய்வுத் துறை , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இன்று சாட்சியமளிக்கவிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த விசாரணையாளர்கள் சிலர் வெளிநாட்டு விஜயத்தில் இருப்பதாலும் சிலர் விசாரணை அமர்வுகளுக்கு வர முடியாத வேறு காரணங்களை கூரியுள்ளதனாலும் இன்றைய தெரிவுக்குழு அமர்வுகளை நிறுத்த குழு தீர்மானம் எடுத்துள்ளது.
அடுத்த மாதம் இறுதிக்குள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.