Thursday 18th of April 2024 06:44:30 AM GMT

LANGUAGE - TAMIL
கூட்டமைப்பின் நகர்வு காரணமாக கல்முனை  செயலகத்திற்கான  முதல்கட்ட நடவடிக்கை

கூட்டமைப்பின் நகர்வு காரணமாக கல்முனை செயலகத்திற்கான முதல்கட்ட நடவடிக்கை


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்டமாக முழு அதிகாரத்துடன் கணக்காளரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அமையவே, அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

இதேவேளை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில், கல்முனை பட்டிணத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நகர்வு காரணமாக இந்த கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE