கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் 7 நீதியரசர்கள் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் 25ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல் டீ பீ தெஹிதெனிய மற்றும் முருது பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு ஆராயப்பட்ட போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.