டிக்கெட் விலை லட்சக்கணக்கில் அள்ளோ... அள்ளுன்னு அள்ளுது. இதனால் ரசிகர் உறைந்து போய் உள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை பார்க்க டிக்கெட்டின் விற்பனை விலை லட்சக்கணக்கில் விற்கப்படுவதுதான்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்தன. தொடர்ந்து இறுதி போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.
27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிக்கு தேர்வாகி உள்ளது. போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பும், போட்டியை நேரில் காணும் ஆவலுடனும் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் டிக்கெட்டுக்காக அலைமோதுவதால் இதனைப் பயன்படுத்தி பலர் ரசிகர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்ப்பதற்காக ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், ஐசிசி அங்கீகரித்த முகமைகளும் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
இவை பிரீமியம் டிக்கெட்டுகளை ரூ.13.78 லட்சத்திற்கும், அடுத்தப்படியாக ரூ.11.76 லட்சத்திற்கும் விற்கின்றன. இதுதான் கிரிக்கெட் ரசிகர்களை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் மட்டுமே டிக்கெட்டுகள் வாங்க வேண்டும். அப்படி இல்லாவிடில், மைதானத்துக்குள் அனுமதிப்பதில் சிக்கல்தான் என்று ஐசிசி, ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பலரும் டிக்கெட் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்று விற்கின்றனர். இது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: