இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் கன மழை, வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.
கனமழை இன்னமும் தொடரும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், பாதிப்புக்கள் மேலும் தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளர். இவர்களை தங்க வைக்க 272 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.