யாழ்.பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களிடையே கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் நடைபெற்றது.
இந்த மோதலில் சில மாணவர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து மோதல் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அங்கு வந்த பொலிஸார் இந்த மோதலுடன் தொடர்புடைய குற்ற்ச்சாட்டில் விஞ்ஞான பீட மாணவர்கள் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.