லண்டன் - லூட்டன் விமான நிலையத்தின் மேற்கூரைகள் ஓட்டைகளால் விமான நிலையத்துக்குள் மழை கொட்டி தீர்த்ததால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மழை வெள்ளம் சுரை வழியாக விமான நிலையத்துகுள் வேகமாக வந்தது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது. இதனால் விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனை பயணிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
உலகிலேயே மிக மோசமான விமான நிலையம் இதுதான் என சமூக வலைத்தளத்தில் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவத்துக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக லூட்டன் விமான நிலைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
எங்கள் சேவையில் சிறிய தடங்கள் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்பாராமல் இப்படி ஆகிவிட்டது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என அதில் குறிப்பிட்டுள்ளது.