வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக என்.பி.வெலிகள இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெலிகள வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வவுனியா வந்த அவர், மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.