வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் படகு சேதமடைந்தது. எனினும் அப்படகிலிருந்த மீனவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படகு பாவனைக்கு உதவாத விதத்தில் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.