கச்சதீவு அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த பனிரெண்டு நாட்களாக சூறைகாற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லை நேற்று காற்றின் வேகம் குறைந்ததையடுத்து ராமேஸ்வரம், மற்றும் மண்டபம் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிசிங்கர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
அவ்வாறு மீன்பிடிக்கச்சென்ற கிசிங்கர், வில்லர், நெல்சன், இன்னாசி ஆகிய மீனவர்கள் நால்வரையும் ஒரு படகையும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் விசைபடையும் படகை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.