பலாலியில் இருந்து ஓகஷ்ட் மாத இறுதியில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலைய ஓடுபதை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்தும் வேலைத்திட்டங்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 2250 மில்லியன் ரூபா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஊடாக 1950 மில்லியன் ரூபாவும் இந்திய நிதியுதவியின் ஊடாக 300 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீட்டர் மார்க்கம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீட்டர் மார்க்கம் மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதனை பூர்த்தி செய்த பின்னர், பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டும்.
திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது, பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் மார்க்கம் முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், யுடு – 320 மற்றும் யுடு – 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன என அறிவிக்கப்பட்டுளு;ளமை குறிப்பிடத்தக்கது.