கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரொறன்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறியை இன்று செவ்வாக்கிழமை சந்தித்து ரொறன்ரோவில் தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
ரொறன்ரோ சிற்றி கோலில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
நாங்கள் இருவரும் எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் துப்பாக்கிச் வன்முறைகள் அதிகரிப்பு குறித்தும் பேசினோம்.
இவற்றுடன் பொதுப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு சேவைகள் மற்றுமு; ரொறன்ரோவில் அதிகரித்துவரும் மத்திய தர வர்க்கத்தினர் குறித்தும் ஆராந்தோம் என இச்சந்திப்பின் பின்னர் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய மத்திய, மாகாண மற்றும் மாநகர சபைகளுடன் இணைந்து நாட்டில் நாட்டில் துப்பாக்கி வன்முறைகளைப் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கைகளுக்காக 4.5 மில்லியன் டொலர்களை கனேடிய மத்திய அரசு ஒதுக்கிய ஒரு நாளின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
லிபரல் கட்சி கைத்துப்பாக்கிகளைத் தடை செய்யும் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. எனினும் துப்பாக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்த முயல்கிறோம் என சந்திப்பின் பின்னர் கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளனர்.