முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்டோரும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
300 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டடம் ஒன்று நெதர்லாந்து நாட்டு அரசாங்கத்தின் கடன் தவணை அடிப்படையிலான முறையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த கட்டடத்தின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட நோயாளர்கள் பராமரிக்கப்படுகின்ற ஒரு மத்திய நிலையமாக இந்த வைத்தியசாலை கட்டடத் தொகுதி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.