Friday 19th of April 2024 02:32:52 AM GMT

LANGUAGE - TAMIL
இராணுவப்பணியை முடித்து டில்லி திரும்பினார் டோனி

இராணுவப்பணியை முடித்து டில்லி திரும்பினார் டோனி


கிரிக்கெட்டுக்கு தற்காலிக லீவு கொடுத்து ராணுவ பணிக்கு சென்று பயிற்சி முடித்து டில்லி திரும்பினார் கிரிக்கெட் வீரர் டோனி.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதிலிருந்து டோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. அவராக ஓய்வை அறிவிக்காவிடில் இனி எந்த போட்டிகளிலும் இந்தியா அணிக்கு அவர் தேர்வாக மாட்டார் என்று தகவல்கள் வெளியானது,

இதனால் டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் அதிகரித்தன. ஆனால் ஓய்வு அறிவிப்பை டோனி தெரிவிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது.

ஆனால் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டோனியின் நடவடிக்கை அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு வரவில்லை. துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் அவர் ஓய்வு அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும்ட எம்.எஸ்.டோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.

தற்போது இந்த பணியை முடித்துள்ள அவர் தலைநகர் டில்லி திரும்பியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE