தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச , ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கிடைத்த பாதுகாப்பு குறித்தான தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ள கோட்டாபய , இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோட்டாவின் தகவல்களையடுத்து அது தொடர்பில் முழு விசாரணை நடத்த அரச புலனாய்வுத்துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு இராணுவ புலனாய்வுத்துறையும் ஒத்துழைக்க கேட்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலருக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.