காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் நேற்று அவர் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, 'காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்' என்றும் கூறினார்.
இதேவேளை, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இரு தரப்பையும் பகைக்க விரும்பவில்லை. நடப்பதை அமைதியாகக் கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.