நிலவுக்கு இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் II விண்கலம் செப்ரெம்பர் 07 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. தனது ருவிற்றர் பக்கத்திலேயே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் II விண்கலம் கடந்த 14 ஆம் திகதி பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேறி சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
சந்திராயன் II விண்கலம் சந்திரனின் தென் பகுதியில் தரையிறங்கும் எனத் தெரிகிறது.