Thursday 28th of March 2024 08:50:40 AM GMT

LANGUAGE - TAMIL
பிரபாகரனின் வேண்டுகோளை தமிழர்கள் நிறைவேற்ற வேண்டும் - மஹிந்த

பிரபாகரனின் வேண்டுகோளை தமிழர்கள் நிறைவேற்ற வேண்டும் - மஹிந்த


ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆவதையோ, அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்தத் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் ரணில் அரசுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

- இப்படித் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியுமு் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். மஹிந்த அரசை கொலைகார அரசு என்றும் சாடியிருந்தார். இதுதொடர்பில் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் இலங்கை செய்தியாளர் மஹிந்தவின் கருத்தை கேட்டிருந்தார்.அவருக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொடர்ந்து கூறிய கருத்துக்கள் வருமாறு

ரணில் அரசை இனி­யும் நம்பி ஏமா­று­வ­தற்கு தமி­ழர்­கள் முட்­டாள்­கள் அல்ல. நான்கு ஆண்­டு­க­ளில் தீர்­வுத் திட்­டம் தொடர்­பில் எத­னை­யும் செய்து முடிக்­காத இந்த ரணில் அரசா அர்த்­த­முள்ள அதி­கா­ரப் பகிர்வை இனி வழங்­கப் போகின்­றது? சாக்­குப் போக்குக்கு புதிய அர­ச­மைப்பு வரைவை சமர்­ப்பித்து விட்டு குற்­றங்­களை எம்­மீது சுமத்­து­வ­தில் எந்­தப் பய­னும் இல்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனாதிபதி ஆவதையோ அவர் தலை­மை­யி­லான அரசு அமை­வ­தையோ 2005ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் விரும்­பி­யி­ருக்­கவில்லை. அவ­ரு­டைய வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளும் அந்­தத் தேர்­த­லைப் புறக்­க­ணித்­தி­ருந்­தார்­கள்.

புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னின் வேண்­டு­கோளை தமிழ் மக்­கள் இப்­போ­தும் ஏற்­றுக் கொள்­கின்­றார்­கள் என்­றால், ரணில் அர­சுக்கு எதி­ரா­கவே ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளும் வாக்­க­ளிக்­க­வேண்­டும். அதற்­காக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் போன்று புறக்­க­ணிக்க வேண்­டும் என்று கோர­வில்லை. அனை­வ­ரும் வாக்­க­ளிக்க வேண்­டும்.

போரின் போது உயி­ரி­ழப்­புக்­கள் நடப்­பது வழமை. அதற்­காக எம்மை கொலை­கார அரசு என்ற குற்­றம் சுமத்தி அரசு பரப்­புரை செய்து வரு­கின்­றது. ஏப்­ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்­பெற்ற மாபெ­ரும் மனி­தப் படு­கொலை யாரு­டைய ஆட்­சி­யில் இடம்­பெற்­றது என்­பதை ரணில் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்­பா­ளர் வெற்­றி­யீட்டி ஆட்­சிக்கு வந்­த­தும் அடுத்து நடை­பெ­று­ம் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் எமது தலை­மை­யி­லான ஆட்சி அமைந்­த­தும் அனைத்து தமிழ்க் கட்­சி­க­ளை­யும் அழைத்து அதே­வேளை, தமிழ் மக்­க­ளின் சிவில் பிர­தி­நி­தி­க­ளை­யும் அழைத்து பேச்சு நடத்தி தீர்­வுத் திட்­டத்தை தயா­ரிப்­போம்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்­றி­யீட்­டி­ய­து­டன் தீர்­வுத் திட்­டத்தை தயா­ரிக்­கும் பணி­கள் ஆரம்­ப­மா­கும். நாடா­ளு­மன்ற தேர்­த­லில் எமது அரசு அமைந்­த­தும் அந்­தப் பணி முடி­வ­டை­யும். தீர்­வுத் திட்­டத்தை, தமிழ் மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டியே தயா­ரிப்­போம். அல­ரி­மா­ளி­கைக்­குள் தனி­அ­றைக்­குள் இர­க­சி­ய­மாக தீர்­வுத் திட்­டத்தை தயா­ரிக்­க­மாட்­டோம் - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE