Thursday 25th of April 2024 11:15:57 AM GMT

LANGUAGE - TAMIL
ஆப்கானில் திருமண நிகழ்வில் குண்டு வெடிப்பு: 63 பேர் பலி!

ஆப்கானில் திருமண நிகழ்வில் குண்டு வெடிப்பு: 63 பேர் பலி!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் 63 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 180 இறக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கான் நேரப்படி நேற்று இரவு 10:40 மணிக்கு இந்த குண்டுவெடித்துள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்குத் தாங்கள் காரணமல்ல என தலிபான் அமைப்பு கூறியுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்துக்கு வேறு எந்த அமைப்புக்களும் இதுவரை பொறுப்பேற்கவும் இல்லை.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சிறுபான்மை இன மக்களை தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.

10 நாட்களுக்கு முன் காபூலில் காவல் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுன்ட்சாதாவின் சகோதரர், வெள்ளியன்று கொல்லப்பட்டார்.

ஹிபதுல்லா அங்கு ஒரு மசூதியில் தொழுகை செய்ய இருந்ததாகவும் அவரை இலக்கு வைத்து அப்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆப்கானிஸ்தான் உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE