தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இன்று வவுனியாவில் ஒன்றுகூடியது.
ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்படுகின்றன எனத் தெரிய வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில், கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.