போரால் பாதிக்கப்பட்ட, உதவி தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு “அறிவூற்று’ இலவசக் கல்வி வழங்கும் திட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முல்லைத்தீவில் ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு - மாங்குளத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பெருமளவிலான மாணவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தில் இணைந்துகொண்ட மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.