Saturday 20th of April 2024 05:08:06 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியத் தேசியக்கொடியை இறக்க முற்பட்ட கர்நாடக மாணவர்கள் ஐவர் பரிதாப மரணம்!

இந்தியத் தேசியக்கொடியை இறக்க முற்பட்ட கர்நாடக மாணவர்கள் ஐவர் பரிதாப மரணம்!


கர்நாடகாவில் மாணவர்கள் விடுதியில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை கீழே இறக்கும் முயற்சியின் போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் கோப்பல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாணவர் விடுதியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த தேசிய கொடியை மீண்டும் கீழே இறக்க மாணவர்கள் முயற்சித்துள்ளனர். அப்போது மேலே சென்ற மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 5 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித:து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், மாணவர்கள் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE