யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை கண்ணகையம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவு நோக்கி மண் ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
இன்று மதியம் 12 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து பயணித்த குறித்த படகு 100 மீற்றர் தூரம் சென்றபோது கவிழ்ந்துள்ளது.
படகில் மூவர் பயணித்தபோதிலும் அவர்கள் பாதிப்பின்றி தப்பியுள்ளனர். சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற தீவுகளுக்கான கட்டுமாணப்பொருட்கள் படகுகள் மூலமே எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் - அருவி இணைத்தின் தீவக பிராந்திய செய்தியாளர்