பெண் சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த கண்காட்சி நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவை சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.
கரைச்சி, பூநகரி பிரதேசத்தில் பெண் கைத்தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இதன்போது கண்காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டன.
நீலன் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் நாறோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.