யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் பிக்கப் வாகனம் ஒன்று தடம்புரண்டதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பிக்கப் வாகனம் அல்லைப்பிட்டி சந்திக்கு அண்மித்த பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்றிருந்த பனை மரத்துடன் மோதி தடம்புரண்டுள்ளது.
வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட்ட நால்வரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். வாகனத்தில் பயணித்த வயோதிபப் பெண் வைத்தியசாலையில் மரணம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.
வாகனத்தின் ஒரு ரயர் வெடித்தமையே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.