Thursday 18th of April 2024 03:52:37 AM GMT

LANGUAGE - TAMIL
வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிய நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு ஏவுகணை பரிசோதனையை வடகொரிய நடத்தியுள்ளது.

பியாங்கன் மாகாணத்தை நோக்கி இன்று அதிகாலை இரண்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை.

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியமை குறித்து தாங்களும் அறிந்துள்ளதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், வடகொரியாவில் நிலவும் சூழலை எங்களின் நேச நாடுகளுடன் இணைந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையை தவிர்க்கும் அல்லது தள்ளிப் போடும் நடவடிக்கை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE