பாரதியாரின் 98 வது நினைவு தினம் இன்று காலை 8.30மணியளவில் வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலை முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் செயலாளர் இ,தாயாபரன் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.