இலங்கை கண் பார்வை மருத்துவர்களின் சங்கம் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வொன்றை இலவசமாக இன்று நடத்தினர்.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணயளவில் கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது விசேட கண் மருத்துவ குழுவினர் கண்பரிசோதனை மேற்கொண்டதுடன், இலவசமாக மூக்கு கண்ணாடிகளையும் வழங்கி வைத்தனர்.