ஈரான் மீது அமெரிக்க மேலும் பல பொருளாதார தடைகளை வித்துள்ளது.
இதற்கு முன்னர் எந்த நாட்டின் மீதும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறி அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன.
அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை மீறி ஈரான் அரசு 300 கிலோவுக்கும் அதிகமாக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக ஐ,நா.முகமை கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.
இதனால், ஈரான் மீது மேலும் பல்வேறு வகையான தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆலோசித்து வந்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு தேசிய வங்கி மீது தற்போது நாம் தடை விதித்துள்ளோம். அந்நாட்டின் மீது போர் தொடுக்க திட்டமிடவில்லை. அதற்கு மாறாக, மிகவும் சுலபமான வழியில் ஈரானில் உள்ள 15 முக்கிய விவகாரங்கள் மீது தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தடை குறித்துக் கருத்து வெளியிட்ட ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப், அமெரிக்காவின் இந்த முயற்சி ஆபத்தானது. ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.
ஈரானை காலுக்குக் கீழே பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா தோற்றுவிட்டது. அந்த விரக்தியின் வெளிப்பாடே இந்தத் தடைகள் எனவும்அவர் கூறினார்.