பாகிஸ்தானில் மலையுடன் பேருந்து மோதி இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட 26 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கில்கிட்-பலுசிஸ்தான் எல்லையிலுள்ள பாபூசர் டாப் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மலையுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 16 பாகிஸ்தான் இராணுவத்தினர் உட்பட 40 பயணிகள் இருந்தனர். விபத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 26 சடலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்தனர்.
படுகாயமடைந்த 13 பயணிகள் சிலாஸில் உள்ள மாவட்டத் தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முகமது வக்கீல் தெரிவித்துள்ளார்.