குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்திருத்த யோசனையைக் கைவிடுவதாக ஹொங்கொங் அரச நிர்வாகம் அறிவித்த பின்னரும் அங்கு தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும், ஹொங்கொங் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வேண்டும், 'ஒரு நாடு - இரண்டு நிர்வாக அமைப்பு' என்ற சீனக் கொள்கையை ஏற்க முடியாது, 'தீவு நாடு' என்ற நிலையே நீடிக்க வேண்டும், அரசியல் உரிமைகள் எந்த வகையிலும் பறிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
ஹொங்கொங் - ஷதின் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் ஹொங்கொங் மற்றும் சீன அரசுகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் காகிதங்களை கசக்கி வீசியதுடன், சிலர் சீன தேசிய கொடியை தரையில் போட்டு மிதித்தனர். பின்னர் அதை சுருட்டி வெளியில் வீசினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் இருதரப் புக்கும் இடையே மோதலாக மாறியது.