ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கையொப்பமிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவை அத்தியாசிய சேவையான அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கத்தினர் கடந்த மாதம் 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
அரசாங்கத்துடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் அவை தோல்வியிலே முடிவுற்றன.
கோரிக்கைளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என்று தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் இன்று ஜனாதிபதியால் ரயில் சேவை அத்தியாவசியமான சேவையாக்கும் விசேட வர்த்தமானியில் கையொப்பமிடப்பட்டுள்ளது.